விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை குரூப்- 2 போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
இங்கு, குரூப்-2 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நவம்பர் 11-ஆம் தேதி, குரூப்-2 போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதனையொட்டி, மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாதிரித் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக, பொது நுலகத் துறையும், தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமியும் இணைந்து குரூப் -2 போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வை கடந்த மாதம் நடத்தியது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மாதிரித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.4) நடைபெற்றது.
இதில், 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
தேர்வினை நூலகர்கள் இளஞ்செழியன், முருகன், ஊர்புற நூலகர் சங்கர் ஆகியோர் கண்காணித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








