விழுப்புரம் மாவட்டத்தில் காந்தி ஜயந்தி தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் விதி மீறிய 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் ராமு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜயந்தி தேசிய விடுமுறை என்பதால் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
அவசர காரணங்களுக்காக வேலை செய்ய நேர்ந்தால், அன்றைய தினத்துக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் அல்லது 3 நாள்களுக்குள் மாற்று விடுப்பு வழங்குவது குறித்து நிர்வாகம் தெரிவித்து, அதற்கான 5 ஏ விண்ணப்பம் வழங்க வேண்டும். இந்த நடமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள், நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 40 கடைகள் முறையாக தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காதது தெரிய வந்தது.
இதேபோன்று, 22 உணவகங்களும், 11 மோட்டார் வாகன பழுதுபார்ப்பகங்களும் விதி மீறி, காந்தி ஜயந்தி அன்று தொழிலாளர்களை வேலைக்கு வரவழைத்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்ற ஈட்டு இணைக் கட்டணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








