கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூரில் உள்ள சுங்கச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் தேநீர் வழங்கி சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ந.ராமநாதன், கள்ளக்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் தங்க.விஜயகுமார் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் பாலமுரளி, பாலசிங்கம் , ராதாகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் சுங்கச் சாவடிக்கு சென்று அதிகாலை ஒரு மணி முதல் 4 மணி வரை அவ்வழியாக வந்த பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கினர்.
தூக்கக் கலக்கத்தைப் போக்கும் பொருட்டு தேநீர் வழங்கப்பட்டது. மேலும், விபத்தை தவிர்க்கும் வகையில் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

2008-க்குப் பின் பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடை!

ஹேப்பி ராஜ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பூத் சிலிப் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

