ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருட்டு

விழுப்புரத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:52 am IST

விழுப்புரத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் மனைவி வள்ளியம்மை (70). இவர், திங்கள்கிழமை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 
கலந்துகொள்ள வந்தார்.
திருமண நிகழ்ச்சி முடிந்து அன்று மாலை ஊருக்குச் செல்ல பழைய பேருந்து நிலையம் சென்றார். அங்கு, வள்ளியம்மை நகைகள் அணிந்திருப்பதை நோட்டம் விட்ட பெண், அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது, நகைகளை அணிந்து கொண்டு பேருந்தில் பயணித்தால், யாராவது பறித்துச் சென்று விடுவார்கள். அதனால், நகைகளை கழற்றி பாதுகாப்பாக பையில் வைக்குமாறு கூறினாராம். 
இதை நம்பிய வள்ளியம்மை தான் அணிந்திருந்த தங்க வளையல்கள், சங்கிலி உள்ளிட்ட 6 பவுன் நகைகளை  கழற்றி பையில் வைத்தார்.
பின்னர், பேருந்தில் ஏறி பையைப் பார்த்தபோது, நகைகளைக் காணவில்லையாம். திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.1.20 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளியம்மை விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.