முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

கணினி மேம்பாடு பணி: 3 நாள்களுக்கு மின் கட்டணம் செலுத்த முடியாது

மின்சார வாரியத்தில் கணினிகளின் சர்வர் தரம் உயர்த்தப்படுவதால், கள்ளக்குறிச்சி மின் பகிர்மான

Updated On :25 பிப்ரவரி 2019, 9:42 am IST

மின்சார வாரியத்தில் கணினிகளின் சர்வர் தரம் உயர்த்தப்படுவதால், கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய உள்கோட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து  4-ஆம் தேதி வரை 3 நாள்கள் மின் கட்டணம் வசூலிக்கும் பணிகள் நிறுத்தப்படும் என மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் எம்.அருட்பெரும்ஜோதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 
மின்சார வாரிய கணினி மையத்தில் மத்திய சர்வர் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற உள்ளது. 
இதையொட்டி, கள்ளக்குறிச்சி மின் பகிர்மானத்துக்கு உள்பட்ட கோட்டப் பகுதிகளில் மார்ச் 1-ஆம் தேதி மாலை 4 மணி முதல் மார்ச் 4-ஆம் தேதி காலை 8 மணி வரை மின் கட்டண அலுவலகங்கள், கணினி வசூல் மையங்களில் மின் கட்டணத்தைச் செலுத்த இயலாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.