ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நீக்கப்பட்ட ஆசிரியர்களை பணியில் சேர்க்க வலியுறுத்தல்

ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்,

Updated On :25 பிப்ரவரி 2019, 9:44 am IST

ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நிபந்தனையின்றி பணியில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மாநிலத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் வரவேற்றார்.
 மாநில பொதுச் செயலர் ரவிச்சந்திரன் செயற்குழு தீர்மானங்கள் குறித்தும், போராட்டம் குறித்தும் விளக்கிப் பேசினார். 
ஜேக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டதின்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி, பணியில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியமும், கடந்த ஊதிய உயர்வின்போது பறிக்கப்பட்ட தனி ஊதியத்தையும் வழங்க வேண்டும்,  மார்ச் மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை ஆய்வுப் பணிக்கு அனுப்புவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.