மாணவர்கள் வாழ்வில் முன்னேற கடின உழைப்பு அவசியம் என தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சுதீந்திரநாத் பாண்டா கூறினார்.
விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் மாணவ, மாணவிகளுக்கான 2018-ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு, அண்ணா
பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சுதீந்திரநாத் பாண்டா கலந்துகொண்டு 1,092 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
மாணவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள பல்வேறு திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது பொறியியல் துறை தொடர்பான வேலைவாய்ப்புகள்
அதிகமாக உள்ளன. இந்த வாய்ப்புகளை பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பயிற்சி
களை அளித்து வருகின்றன. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்வில் முன்னேற கடின உழைப்பு, ஈடுபாடு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை முக்கியம் என்றார் அவர். விழாவில், விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 215 மாணவ, மாணவிகளும், ஆரணி அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 193 மாணவ, மாணவிகளும், காஞ்சிபுரம் அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 220 மாணவ, மாணவிகளும், திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 199 மாணவ, மாணவிகளும், பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 265 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,092 பேர் பட்டம் பெற்றனர். மேலும், பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் தேர்ச்சி பெற்ற 9 மாணவ, மாணவிகள் பதக்கங்களையும் பெற்றனர்.
முன்னதாக விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில் வரவேற்றார். தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ராமச்சந்திரன், ஞானமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். விழாவில், அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன், உறுப்பு பொறியியல் கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிட சென்ற விவசாயிகள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தம்!

தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை! அமைச்சர் நிர்மல் குமார் பதில்
இந்தியாவின் சொர்க்கப் பறவை
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நாவறட்சி தணிய...!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


