தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

சாலை விபத்தில் இளைஞர் காயம்: வேகத் தடை அமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் காயமடைந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நெடுஞ்சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On :26 மே 2019, 5:33 am IST


திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் காயமடைந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நெடுஞ்சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர் அருகே உள்ள கொடிமா காலனி பகுதியைச் சேர்ந்த காளி மகன் சீத்தாராமன் (28). இவர், சொந்த வேலை காரணமாக சனிக்கிழமை திருக்கோவிலூரிலிருந்து பெரியசெவலை நோக்கி பைக்கில் சென்றார்.
திருக்கோவிலூர் - பெரியசெவலை நெடுஞ்சாலையில் டி.குன்னத்தூர் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார், பைக் மீது மோதியதால் சீத்தாராமன் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் அவரை மீட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த களமருதூரைச் சேர்ந்த ராமானுஜத்தைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
பின்னர், திருக்கோவிலூர் - பெரியசெவலை நெடுஞ்சாலையில் டி.குன்னத்தூர் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்வதால், அந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்து டி.குன்னத்தூர் பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். மறியலால் திருக்கோவிலூர் - பெரியசெவலை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.