கள்ளக்குறிச்சி திருவள்ளுவர் பல்கலைக்கழக (உறுப்பு) கலை, அறிவியல் கல்லூரியில் 2019 - 20ஆம் ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை (மே 27) தொடங்குகிறது.
இந்தக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கனிணி அறிவியல், கணிதம் உள்ளிட்ட 7 பிரிவுகள் உள்ளன. இந்தப் பிரிவுகளுக்கு கடந்த 1-ஆம் தேதியிலிருந்து மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர்.
இந்த நிலையில், மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (மே 27) தொடங்குகிறது. அன்றைய தினம் ராணுவ வீரர்களின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களுக்கு காலை 10 மணி முதல் 11 மணி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
11 மணிக்கு மேல் இளநிலை அறிவியல் பாடங்களுக்கும், செவ்வாய்க்கிழமை (மே 28) வணிகவியல் பிரிவுக்கும், புதன்கிழமை ( மே 29) இளநிலை தமிழ் பிரிவுக்கும், வியாழக்கிழமை (மே 30) இளநிலை ஆங்கிலம் பிரிவுக்கும், வெள்ளிக்கிழமை ( மே 31) நேரடி சேர்க்கையும் (வராண்டா) நடைபெறுகின்றன என அந்தக் கல்லூரி முதல்வர் மு.முத்துசாமி தெரிவித்தார். மேலும், இளநிலை கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருந்த அனைத்து மாணவர்களுக்கும் 10 நாள்களுக்கு முன்பே அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்காத மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என கல்லூரியின் முதல்வர் மு.முத்துசாமி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் தில்லியில் ஆலோசனை!

இந்தியாவின் ஏற்றுமதி 15% அதிகரிப்பு!

2029 மக்களவைத் தேர்தல் பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணி அறிவிக்க வேண்டும்: சிவசேனை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


