கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பாரம்பரிய விளையாட்டுக்கான கோடைப் பயிற்சி நிறைவு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கான கோடைப் பயிற்சியின் நிறைவு விழா விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :26 மே 2019, 5:35 am IST


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கான கோடைப் பயிற்சியின் நிறைவு விழா விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான மல்லர் கம்பம்,  சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளுக்கான கோடைப் பயிற்சி நடைபெற்றது.  மாவட்ட மல்லர் கம்பக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், 3 வயது முதல் 35 வயது வரை உடையோர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் வி.பி.எஸ். பள்ளி மைதானத்தில் இந்த கோடைப் பயிற்சி கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், மல்லர் கம்பம் ஏறுதல்,  சிலம்பம், கயிறு மல்லர் கம்பம், யோகா, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 100 மாணவ, மாணவிகள் அங்கேயே தங்கியபடி பயிற்சி மேற்கொண்டனர்.
கோடை பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் அமைப்பின் பயிற்சியாளர் செல்வமொழியான் வரவேற்றார். வி.பி.எஸ். பள்ளி முதல்வர் எஸ்.செந்தில் தலைமை வகித்தார்.  ஒருங்கிணைப்பாளர் எம்.ஜனார்த்தனன் வரவேற்றார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.ஞானசேகர், அரிமா சங்க ஆளுநர் எம்.சரவணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.கணேஷ்குமார், தமிழ்நாடு மல்லர் கம்பக் கழக துணைத் தலைவர் கே.பாபு, அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவு விழாவில், மல்லர் கம்பம், சிலம்பம் உள்ளிட்ட பயிற்சி பெற்ற மாணவர்களின் சாகசங்கள் நடைபெற்றன. பயிற்சி முடித்த மாணவர்களுக்கு  சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். செந்தமிழ் அன்பு நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.