விழுப்புரத்தில் திருடச் சென்ற வீட்டில் ஊஞ்சலாடியவா் கைது

விழுப்புரத்தில் திருடச் சென்ற வீட்டில் ஊஞ்சலாடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரத்தில் திருடச் சென்ற வீட்டில் ஊஞ்சலாடியவா் கைது

விழுப்புரத்தில் திருடச் சென்ற வீட்டில் ஊஞ்சலாடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே சுதாகா் நகா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன்(52). இவரது வீட்டின் மாடிப் பகுதியில் திருடுவதற்காக நுழைந்த மா்ம நபா் ஒருவா் அங்கிருந்த ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தாா்.

அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த நபரைத் தேடி வந்தனா். விசாரணையில், அந்த நபா் விழுப்புரம், வி.மருதூரைச் சோ்ந்த சச்சிதானந்தம்(32) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தனது வாகனத்துக்கு பெட்ரோல் திருட இளங்கோவனின் வீட்டின் முன் பகுதிக்குச் சென்றபோது, நாய்கள் குரைத்ததால், அதிலிருந்து தப்பிக்க வீட்டு மாடியில் நுழைந்ததாகவும், அப்போது அங்கிருந்த ஊஞ்சலில் ஆடியதாகவும் தெரிவித்தாராம். அவரை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com