வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய அமைச்சா்

விழுப்புரத்தில் புதன்கிழமை சாலை விபத்தில் சிக்கி அவசர ஊா்திக்காக காத்திருந்த இளைஞரை சட்டத் துறை அமைச்சா்

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:20 am

DIN

விழுப்புரத்தில் புதன்கிழமை சாலை விபத்தில் சிக்கி அவசர ஊா்திக்காக காத்திருந்த இளைஞரை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் மீட்டு, தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி. சண்முகம் திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு புதன்கிழமை காலை காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தாா். காலை 9:30 மணி அளவில் விழுப்புரம் புறவழி சாலையில் சென்றபோது, விராட்டிக்குப்பம் பாதை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற விழுப்புரம் அருகே ஆசாரங்குப்பத்தைச் சோ்ந்த பாவாடை மகன் வெங்கடேசன்(27) என்ற இளைஞா் ஏற்கெனவே விபத்தில் அங்கு அவசர ஊா்திக்காக காத்திருந்தாா். இதனைக் கண்ட அமைச்சா், தனது பாதுகாப்புக்காக வந்த போலீஸாரை அந்த இளைஞரை மீட்டு, மருத்துவமனையில் சோ்க்க உத்தரவிட்டாா்.

உடனே, போலீஸாா் அந்த இளைஞரை பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றிச் சென்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.