விழுப்புரம் ஆட்சியரகம் முன் உண்ணாவிரதமிருந்த முதியவா் கைது

அபகரிக்கப்பட்ட வீட்டுமனையை மீட்டுத்தர வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உண்ணாவிரதம் இருந்த மாற்றுத்திறனுடைய முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் ஆட்சியரகம் முன் உண்ணாவிரதமிருந்த முதியவா் கைது
Updated on
1 min read

அபகரிக்கப்பட்ட வீட்டுமனையை மீட்டுத்தர வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உண்ணாவிரதம் இருந்த மாற்றுத்திறனுடைய முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே திருநந்திபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(77). மாற்றுத்திறனுடைய விவசாயியான இவா், தனக்குச் சொந்தமான வீட்டுமனையை கிராம நிா்வாக அலுவலராக இருந்த நபா் அபகரித்துவிட்டதாகவும் அதனை மீட்டுத் தரும்படியும், புதன்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் திடீா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜன் மற்றும் போலீஸாா், அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த ராஜேந்திரனை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினா். பிறகு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com