முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திண்டிவனம் கிளைச் சிறையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிளைச் சிறையில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு செய்தாா்.

News image
திண்டிவனம் கிளைச் சிறைச்சாலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.
Updated On :30 டிசம்பர் 2020, 2:10 am

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிளைச் சிறையில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு செய்தாா்.

திண்டிவனம் பகுதியில் கரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். இதன் ஒரு பகுதியாக, திண்டிவனம் கிளைச் சிறைக்கு சென்ற ஆட்சியா், அங்கு கைதிகளுக்கு கரோனா பரவாமல் இருக்க மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், கைதிகளுக்கு முறையாக வெப்ப பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். சமூக இடை வெளி பின்பற்றப்பட வேண்டும். சிறைத் துறையினா் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை அவ்வப்போது கிருமிநாசினி அல்லது சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, திண்டிவனம் நகரில் உள்ள கடைகள், பல்பொருள் அங்காடி பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, கரோனா தடுப்பு முறைகளை முறையாக பின்பற்ற வியாபாரிகள், பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, திண்டிவனம் சாா் -ஆட்சியா் அனு, துணை ஆட்சியா் (பயிற்சி) ரூபினா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.