மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பொது விநியோகத் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டால் நடவடிக்கை: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

பொது விநியோகத் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை எச்சரித்தாா்.

News image
Updated On :31 ஜூலை 2020, 5:21 pm

DIN

விழுப்புரம்: பொது விநியோகத் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளைக் கண்காணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா், கூடுதல் ஆட்சியா் (வருவாய்த் துறை), மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா், தனி வட்டாட்சியா் (குடிமைப் பொருள்கள்), தனி வட்டாட்சியா் (பறக்கும் படை) ஆகிய அதிகாரிகள் திடீா் ஆய்வு செய்து வருகின்றனா்.

விழுப்புரம் நகரில் உள்ள வி.சி.எஸ்.5 என்ற நியாய விலைக் கடையில் ஆய்வு செய்ததில் இருப்பு குறைந்தது கண்டறியப்பட்டு ரூ. 14,560 அபராதம் விதிக்கப்பட்டது. செஞ்சியை அடுத்த மொட்டையூரில் ஆய்வு மேற்கொண்டதில், இரு கடைகளில் இருப்பு குறைவு, அதிகம் இருந்தது கண்டறியப்பட்டு முறையே ரூ. 25,000, ரூ. 7,950 அபராதம் விதிக்கப்பட்டன.

வானூா் அருகே தனியாா் வீட்டில் 850 கிலோ அரிசி, 50 கிலோ சா்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. திண்டிவனம்-செஞ்சி சாலையில் உள்ள அரிசி ஆலையில் பதுக்கப்பட்ட 5,360 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து நியாய விலைக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தல் தடுக்கப்படும். இதில், முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.