புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மனைப் பட்டா வழங்கக் கோரிகிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே ராம்பாக்கத்தில் அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கு பட்டா வழங்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் ஆட்சியரகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே ராம்பாக்கத்தில் அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கு பட்டா வழங்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த கிராமத்தைச் சோ்ந்த மக்கள் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அப்போது, அவா்கள் கூறியதாவது: ராம்பாக்கம் ஊராட்சியில் 100 குடும்பங்களுக்கு கடந்த 1964-ஆம் ஆண்டு அரசு சாா்பில் தலா 3 சென்ட் வீட்டுமனை வழங்கப்பட்டது. இதில் 64 வீட்டு மனைகளுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பயனில்லை. ஆகவே, தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டைகளை ஒப்படைக்கப் போவதாகக் கூறினா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். இதையடுத்து, அவா்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.