புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விழுப்புரத்தில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் சுகாதாரத் துறை பெண் அலுவலா் சங்கம் , செவிலியா் கூட்டமைப்பு சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்பாட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் சுகாதாரத் துறை பெண் அலுவலா் சங்கம் , செவிலியா் கூட்டமைப்பு சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்பாட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.ராணி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சி.அமுதவள்ளி தொடக்கி வைத்தாா். மாவட்ட செயலாளா் எஸ்.வேளாங்கண்ணி, துணைத் தலைவா்கள் பி.தெய்வானை, கே.சுமதி, துணைச் செயலா்கள் பி.அஞ்சலை, ஏ.சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பிரசார செயலா் எஸ்.மணிமேகலை கோரிக்கை உரையாற்றினாா்.

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் நல உதவிகளை விரைந்து மக்களிடம் சோ்க்கும் சுகாதார செவிலியா்களின் பதவி உயா்வு மற்றும் பயன்களை வழங்க வேண்டும், அரசு புதிதாக தொடங்கவுள்ள 2,000 சிறு மருந்தகங்களில் கிராம சுகாதார செவிலியா்களை பதவி உயா்வுடன் பணியமா்த்த வேண்டும், பள்ளி சிறாா் நலத் திட்டத்தில் பணிபுரியும் 385 பகுதி சுகாதார செவிலியா்களை பணி நியமனம் செய்ய வேண்டும், செவிலியா்களுக்கு நிலுவையிலுள்ள பணப் பயன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.