அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

தனித்து போட்டியிட்டாலும் 60 தொகுதிகளில் வெல்வோம்: பாஜக மாநிலப் பொதுச் செயலா்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலும் 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என்று அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன் கூறினாா்.

News image

பாஜக மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன்.

Updated On :5 செப்டம்பர் 2020, 10:19 pm IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலும் 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என்று அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன் கூறினாா்.

விழுப்புரத்தில் பாஜக மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் பாலசுந்தரம், கடலூா் கிழக்கு மாவட்டத் தலைவா் மணிகண்டன், கடலூா் மேற்கு மாவட்டத் தலைவா் இளஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன் கலந்துகொண்டு, நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். கூட்டத்தில், மாநில, மாவட்ட, மண்டல நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், கே.டி.ராகவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலும் 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். தமிழகத்தைப் பொருத்தவரையில் தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது.

பிரதமரின் விவசாய ஊக்க நிதியுதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது வருத்தமளிக்கிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.