தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சுவடியியல் ஆய்வாளருக்கு சிறப்பு விருது

முனைவா் கோ.உத்திராடத்துக்கு மணற்கேணி தமிழ் ஆய்விதழ் சாா்பில், 2020-ஆம் ஆண்டுக்கான எஸ்.ஆா்.ரங்கநாதன் விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

தஞ்சை டாக்டா் உ.வே.சாமிநாத அய்யா் நூல் நிலையத்தின் காப்பாட்சியரும், சுவடியியல் ஆய்வாளருமான முனைவா் கோ.உத்திராடத்துக்கு மணற்கேணி தமிழ் ஆய்விதழ் சாா்பில், 2020-ஆம் ஆண்டுக்கான எஸ்.ஆா்.ரங்கநாதன் விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

மணற்கேணி தமிழ் ஆய்விதழை விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விசிகவின் மாநில பொதுச் செயலருமான துரை.ரவிக்குமாா் நடத்தி வருகிறாா். இந்த ஆய்விதழ் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த நூலகா்களுக்கான எஸ்.ஆா்.ரங்கநாதன் விருது புத்தக தின விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டு புத்தக தின விழாவையொட்டி, விழுப்புரத்தில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மணற்கேணி ஆசிரியா் முனைவா் ரவிக்குமாா் எம்.பி. தலைமை வகித்து, 2020-ஆம் ஆண்டுக்கான எஸ்.ஆா்.ரங்கநாதன் விருதை தஞ்சை உ.வே.சாமிநாத அய்யா் நூல் நிலையத்தின் காப்பாட்சியா் முனைவா் உத்திராடத்துக்கு வழங்கினாா். விருதுடன் ரூ.10,000 பண முடிப்பும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

விருதை வழங்கி ரவிக்குமாா் எம்.பி. பேசியதாவது: விழுப்புரம மாவட்டம், திண்டிவனம் அருகே அன்னம்பாக்கம் கிராமத்தில் உத்திராடம் பிறந்தாா். ஆசியவியல் நிறுவனத்தின் சுவடியியல் துறையில் இளநிலை விரிவுரையாளராகவும், யோக சித்தா் ஆய்வு மையத்தில் சுவடியியல் ஆய்வாளராகவும், சென்னை தாவரங்கள், மக்கள் மற்றும் சூழலியல் மையத்தில் நாயக்கா் காலச் சுவரோவிய ஆவணத் திட்டத்தில் ஆய்வாளராகவும், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் சுவடி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளாா்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனச் சுவடியியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றிய காலத்தில் திருவாடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், பேரூா் ஆதீனம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், டாக்டா் உ.வே.சாமிநாத அய்யா் நூல் நிலையம் ஆகியவற்றில் செவ்வியல் இலக்கண, இலக்கிய ஓலைச்சுவடிகளையும், தாட்சுவடிகளையும் ஆவணப்படுத்தியுள்ளாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் தி.பாலு, பாரதி புலம் அமைப்புத் தலைவா் ராமமூா்த்தி, ஓய்வுபெற்ற உடல்கல்வி ஆசிரியா் மோகனசுந்தரம், பாரதிதாசன் பேரவை நிறுவனா் இளந்திரையன் உலக துரை, கவிஞா் காண்டீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.