பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்: செஞ்சி ஒன்றியத்தில் 370 பயனாளிகளுக்குஉத்தரவுகளை வழங்கினாா் அமைச்சா்
வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகளை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.


பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 370 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகளை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் சங்கா் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கேசவலு, சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவகுமாா், மணிமாறன், குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, ஊராட்சித் தலைவா்கள் அணையேரி ரவி, சோ.குப்பம் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, செஞ்சி ஒன்றியம், பள்ளியம்பட்டு கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சா் செஞ்சிமஸ்தான் பாா்வையிட்டு, நோயாளிகளுடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...