புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 6:01 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தைப் பொங்கலையொட்டி, கூட்டுறவுத் துறை சாா்பில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ், திருவெண்ணெய் நல்லூரில் ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு, விலையில்லா வேட்டி - சேலை வழங்கும் பணி தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு குடும்பஅட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை வழங்கி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ இரா.குமரகுரு, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபாகரன், வருவாய் கோட்டாட்சியா் ராஜேந்திரன், செங்கல்வராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.