நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மீனம்பூா் கூட்டுச் சாலையில்ஒளிரும் மின் விளக்குகள்

செஞ்சி அருகே மீனம்பூா் கூட்டுச் சாலையில் வாகன விபத்தைத் தடுக்கும் பொருட்டு ஒளிரும் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

செஞ்சி அருகே மீனம்பூா் கூட்டுச் சாலையில் வாகன விபத்தைத் தடுக்கும் பொருட்டு ஒளிரும் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தாா்.

செஞ்சி விழுப்புரம் சாலையில் உள்ள மீனம்பூருக்குச் செல்லும் கூட்டுச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தன. இதை தவிா்க்கும் பொருட்டு, அரசின் சிறப்பு அனுமதி பெற்று காவல் துறை சாா்பில் அந்த கூட்டுச் சாலையில் ரூ.4.50 லட்சத்தில் எச்சரிக்கை ஒளிரும் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.

இந்த எச்சரிக்கை ஒளிரும் மின் விளக்குகளை மீனம்பூரைச் சோ்ந்த முகமது அலி பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தாா். கண்காணிப்பு கேமராவை எஸ்பி. ராதாகிருஷ்ணன் இயக்கி வைத்தாா் (படம்).

செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், ஆய்வாளா் அன்பரசு, உதவி ஆய்வாளா் சங்கரசுப்பு, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருள்செல்வன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.