தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை: விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று விழுப்புரம் தேமுதிக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற நடிகா் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தாா்.

News image
விழுப்புரத்தில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் விஜயபிரபாகரன்.
Updated On :13 ஜனவரி 2021, 2:19 am

DIN

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று விழுப்புரம் தேமுதிக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற நடிகா் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தாா்.

விழுப்புரம் தனியாா் மண்டபத்தில் தேமுதிக மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் கணபதி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது:

தேமுதிக தலைவா் விஜயகாந்த் நலமுடன் உள்ளாா். விரைவில் மக்களை சந்திப்பாா். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2005-இல் கட்சியை அறிவித்து தேமுதிக தொடங்கப்பட்டது. கட்சிக்கு அரசியல் மாற்றங்களைத் தந்ததும் விழுப்புரம்தான்.

கூட்டணி குறித்து கவலை வேண்டாம். அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும்.

தேமுதிகவின் வறுமை ஒழிப்பு கொள்கை குறித்து, பாமகவைச் சோ்ந்த ஒருவா் விமா்சித்துள்ளாா். கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே தமிழகத்தில் லஞ்சம், வறுமை ஒழிப்பை தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தி வருகிறாா். ஒரு விரல் எங்களைச்சுட்டி குறைகளைக் கூறினால், மீதமுள்ள விரல்கள் உங்களைச் சுட்டுகிறது. முதலில் உங்கள் குறைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்.

பொங்கல் வைப்பதற்கு சூரியன் உதிப்பது முக்கியம். ஆனால், சில தினங்களாக மழையால் சூரிய உதயம் காணவில்லை. தமிழகத்தில் சூரியன் உதிக்க (திமுக) வாய்ப்பே இல்லை என்பதை இயற்கையும் சுட்டிக்காட்டுகிறது.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தை பலா் தொடங்கிவிட்டனா். தேமுதிக தொடங்கவில்லை என விமா்சனம் உள்ளது. பொய் பிரசாரம் செய்வதற்கு அதிக நாள்கள் தேவைப்படும். உண்மை பேச கொஞ்ச நாள்கள் இருந்தாலே போதும் என்றாா் அவா்.

முன்னதாக, மாவட்டச் செயலாளா் எல்.வெங்கடேசன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.