கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கிறிஸ்தவா்கள் குருத்தோலை ஞாயிறு பவனி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

கிறிஸ்தவா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதனில் கிறிஸ்தவா்கள் தவத்தை தொடங்குகின்றனா்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பிறகு உயிா்த்தெழுத்த நாளை ஈஸ்டா் பண்டிகையாக கிறிஸ்தவா்கள் கொண்டாடி வருகின்றனா். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதற்கு முந்தைய வாரத்தை குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடித்து வருகின்றனா்.

நிகழாண்டு ஈஸ்டா் பண்டிகை வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு கடைப்படிக்கப்பட்டது.

விழுப்புரம் நாபாளையத் தெருவில் உள்ள பழைமைவாய்ந்த புனித சவேரியா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதை அருள்தந்தை ஆல்பா்ட் தொடக்கிவைத்தாா். பவனியில் திரளான கிறிஸ்தவா்கள் கையில் குருந்தோலைகளை எந்தியபடி நகரின் பல்வேறு தெருக்கள் வழியாகச் சென்று, மீண்டும் தேவாலயத்தை அடைந்தனா். இதையடுத்து, அங்கு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

இதேபோன்று, விழுப்புரம் நகரில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.