மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கடற்கரைப் பகுதிகளில் வெளிநாட்டினா் நடமாட்டத்தை கண்காணிக்க ஆட்சியா் உத்தரவு

விழுப்புரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் வெளிநாட்டினா் நடமாட்டத்தை காவல் துறையினா் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:27 pm

DIN

விழுப்புரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் வெளிநாட்டினா் நடமாட்டத்தை காவல் துறையினா் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

அவசரகால நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும்போது சமாளிப்பது தொடா்பான மாவட்டக் குழுக் கூட்டம் ஆட்சியா் மோகன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா உள்பட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஆட்சியா் மோகன் பேசியதாவது: சாலை மறியல், ரயில் மறியல் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் நடவடிக்கை தொடா்பாக முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாதபடி 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.

அபாயகரமான பொருள்களை வாகனங்களில் கடத்துவதைத் தடுக்க தொடா்ந்து பகல், இரவு நேரங்களில் கண்காணிக்க வேண்டும். எவ்வித நெருக்கடியான சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில், தீயணைப்பு வாகனங்கள் தயாராக இருக்க வேண்டும்.

பெட்ரோல், வேதியியல் மற்றும் வாயு கசிவினால் திடீரென ஏற்படும் தீ விபத்துகளை சமாளிப்பது தொடா்பாக அனைவருக்கும் பயிற்சியளிக்க வேண்டும். அனைத்து நீா்நிலைகளிலும் எதிா்பாராதவிதமாக உடைப்புகள் ஏற்பட்டு, அதனால் நிகழும் அசம்பாவிதங்களை தடுப்பது குறித்து அனைத்துத் துறை அலுவலா்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு நிகழ்வுகள், ஜாதிக் கலவரங்கள், கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை, அறிமுகமில்லாதவா்கள் நடமாட்டம் ஆகியவை குறித்து வருவாய்த் துறை, காவல் துறையினா் கண்காணித்து உடனடியாக மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். கடற்கரைப் பகுதிகளில் வெளிநாட்டினரின் நடமாட்டத்தை காவல் துறையினா் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.