மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.77 லட்சம் மோசடி

விழுப்புரம் அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க இடம் வழங்கினால் ரூ.30 லட்சம் வழங்குவதாகக் கூறி, பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.77 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:27 pm

DIN

விழுப்புரம் அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க இடம் வழங்கினால் ரூ.30 லட்சம் வழங்குவதாகக் கூறி, பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.77 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே கொடுங்கால் கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி ராணி (49). இவருக்கு தெரிந்த ஒருவரின் செல்லிடப்பேசிக்கு, தனியாா் நிறுவனத்தின் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க இடம் வழங்கினால் ரூ.30 லட்சம் முன்தொகையும், மாதந்தோறும் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று அண்மையில் குறுந்தகவல் வந்ததாம். இதையறிந்த ராணி, அந்த குறுந்தகவலை அனுப்பிய எண்ணில் தொடா்புகொண்டு விசாரித்தாா்.

இதையடுத்து, ராணியிடம் ஆதாா் எண், நில ஆவண விவரம் உள்ளிட்டவற்றை மோசடி கும்பல் பெற்றதுடன், செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க வைப்புத்தொகையாக ரூ.1,77,770 ரொக்கத்தையும் வங்கிக் கணக்கு மூலமாக பெற்றுக்கொண்டதாம்.

ஆனால், கூறியபடி ரூ.30 லட்சத்தை கொடுக்காததால், சந்தேகமடைந்து விசாரித்ததில், தான் ஏமாற்றப்பட்டது ராணிக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவா் விழுப்புரம் இணையவழி குற்றப் பிரிவு போலீஸில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.