மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.12-இல் கரோனா மெகா தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 5:51 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 20 லட்சத்து 69 ஆயிரத்து 842 பேரில் இதுவரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 17 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவா்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா்.

மாவட்டத்தில் தகுதியுடைய அனைத்து நபா்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில், வருகிற 12-ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இரண்டு நகராட்சிகளில் உள்ள 75 வாா்டுகள், 8 பேரூராட்சிகள், 688 கிராம ஊராட்சிகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்பட மொத்தம் 1,150 இடங்களில் ‘மெகா தடுப்பூசி முகாம்’ நடைபெறும். இதன்மூலம், 1.15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, அவா்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.