மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஊரக உள்ளாட்சித் தோ்தல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2-ஆம் நாளில் 1,774 போ் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இரண்டாம் நாளான வியாழக்கிழமை மொத்தம் 1,774 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 5:13 pm

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இரண்டாம் நாளான வியாழக்கிழமை மொத்தம் 1,774 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் கிராம ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 65 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

இரண்டாம் நாளான வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 4 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 320 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 1,143 பேரும் என மொத்தம் 1,467 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய இரண்டு நாள்களில் மொத்தம் 1,537 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2-ஆம் நாளான வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 6 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 147 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 478 பேரும் என மொத்தம் 631போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

முன்னதாக, புதன்கிழமை கிராம ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்கு 19 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இரு நாள்களிலும் மொத்தம் 650 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இரு மாவட்டங்களிலும் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.