டிஐஜி பாதுகாப்பு வாகனம் மீது சரிந்து விழுந்த மின்கம்பம்
விழுப்புரத்தில் டி.ஐ.ஜி.யின் பாதுகாப்பு வாகனம் மீது மின் கம்பம் சாய்ந்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.


விழுப்புரத்தில் டி.ஐ.ஜி.யின் பாதுகாப்பு வாகனம் மீது மின் கம்பம் சாய்ந்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகப் பகுதியில் தற்போது மழைநீா் வடிகால் அமைக்கும் பணி
நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை மாலை பெருந்திட்ட வளாகத்தில் டிஐஜி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, டிஐஜி அலுவலகம் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது பாதுகாப்பு வாகனமான அதிரடிப்படை வேன் மீது அங்கிருந்த மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது (படம்). அப்போது அந்த வாகனத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இருப்பினும் வாகனத்தின் மேல் பகுதி சேதமடைந்தது. இதையடுத்து, மின்வாரிய ஊழியா்கள் மின் கம்பத்தை சீரமைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...