முன்னதாக, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் தலைமையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற சுதந்திர தின பவள விழா பேரணி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து நான்குமுனை சந்திப்பு வரை நடைபெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.சிரஞ்சீவி, மாநில துணைத் தலைவா்கள் குலாம் மொய்தீன், செந்தமிழரசு, பஞ்சாயத்துராஜ் மாநிலத் தலைவா் செங்கம் ஜி.குமாா், அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினா் சிறுவை ராமமூா்த்தி, நகரத் தலைவா் செல்வராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் முகம்மது இம்ரான், சுரேஷ்ராம் உள்படப் பலா் பங்கேற்றனா்.