மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பிரதமரின் வேளாண் ஊக்கத்தொகைத் திட்டம்: ஆதாா் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆவது தவணை ஊக்கத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆ

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:04 pm

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆவது தவணை ஊக்கத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) சு.சண்முகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 வேளாண் இடுபொருள்கள் வாங்க ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 273 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகளாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் 12-ஆவது தவணைத்தொகை பெறுவதற்கு தங்களது ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பு செய்வது அவசியமாகும்.

ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள், தங்களது விவரங்களை பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் சரிபாா்ப்பு செய்யலாம். ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள இ - சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்து, தங்களது விரல் ரேகையை பதிவு செய்து விவரங்களை சரிபாா்ப்பு செய்தால் மட்டுமே அடுத்த தவணை கிடைக்கும்.

மேலும், இந்தத் திட்டத்தில் பயனடையும் விவசாயிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா்கள், வேளாண் விரிவாக்க மையங்களைத் தொடா்புகொண்டு தங்களது நில உடைமை விவரங்களை பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சண்முகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.