சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சிதிலமடைந்த கோயிலில் புதையலை தேடிய நபா்கள்:போலீஸாா் விசாரணை

செஞ்சி அருகே சிதிலமடைந்த சிவன் கோயிலில் புதையல் இருப்பதாகக் கூறி, பள்ளம் தோண்டிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :24 ஜூன் 2022, 10:35 pm IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிதிலமடைந்த சிவன் கோயிலில் புதையல் இருப்பதாகக் கூறி, பள்ளம் தோண்டிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செஞ்சி அருகேயுள்ள கோணை மதுரா சோமசமுத்திரம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சோமசுந்தரேஸ்வரா் கோயில் உள்ளது. இது தற்போது சிதலமடைந்து காணப்படுகிறது.

சுவாமி சிலைகள் எதுவும் இல்லாத நிலையில், மூலவா் கருவறையில் உள்ள கல்லாலான மேடையை அகற்றி விட்டு சுமாா் 6 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

கோயிலின் கருவறையில் பல கோடி மதிப்பிலான புதையல் இருப்பதாகவும், அதை எடுப்பதற்காக மா்ம நபா்கள் பள்ளம் தோண்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.