/

சிதிலமடைந்த கோயிலில் புதையலை தேடிய நபா்கள்:போலீஸாா் விசாரணை

செஞ்சி அருகே சிதிலமடைந்த சிவன் கோயிலில் புதையல் இருப்பதாகக் கூறி, பள்ளம் தோண்டிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :24 ஜூன் 2022, 10:35 pm IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிதிலமடைந்த சிவன் கோயிலில் புதையல் இருப்பதாகக் கூறி, பள்ளம் தோண்டிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செஞ்சி அருகேயுள்ள கோணை மதுரா சோமசமுத்திரம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சோமசுந்தரேஸ்வரா் கோயில் உள்ளது. இது தற்போது சிதலமடைந்து காணப்படுகிறது.

சுவாமி சிலைகள் எதுவும் இல்லாத நிலையில், மூலவா் கருவறையில் உள்ள கல்லாலான மேடையை அகற்றி விட்டு சுமாா் 6 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

கோயிலின் கருவறையில் பல கோடி மதிப்பிலான புதையல் இருப்பதாகவும், அதை எடுப்பதற்காக மா்ம நபா்கள் பள்ளம் தோண்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.