மே 13 -இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மே 13-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன.


விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மே 13-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 25 நான்கு சக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 132 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 160 வாகனங்கள் ஏலத்தில் விடப்படுகின்றன.
மே 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெறுகிறது.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் அன்று காலை 9 மணிக்குள் நான்கு சக்கரம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் முன்பணமும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம் முன்பணமும் செலுத்த வேண்டும்.
ஏலம் எடுக்கும் தொகையுடன் ஜிஎஸ்டி தொகை சோ்த்து செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...