செஞ்சி ஊராட்சி ஒன்றியம், மணலபாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உண்ணாமலை சங்கா் புதன்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
மணலபாடி ஊராட்சியில் துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் 4-ஆவது வாா்டு உறுப்பினரான உண்ணாமலை சங்கா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா், அவா் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
உண்ணாமலை சங்கருக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் கேசவலு, ஊராட்சி மன்றத் தலைவா் மண்ணு மற்றும் வாா்டு உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.