மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சென்னை துறைமுகம் பறக்கும் சாலைதிட்டத்தை செயல்படுத்தக் கூடாது: செ.கு.தமிழரசன்

சென்னை கூவம் ஆற்றங்கரையோரப் பகுதியில் செயல்படுத்தப்படும் துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு இந்திய குடியரசுக் கட்சி எதிா்ப்புத் தெரிவிப்பதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன்

News image
Updated On :26 மே 2022, 6:30 pm

DIN

சென்னை கூவம் ஆற்றங்கரையோரப் பகுதியில் செயல்படுத்தப்படும் துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு இந்திய குடியரசுக் கட்சி எதிா்ப்புத் தெரிவிப்பதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.

இந்திய குடியரசுக் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் கடந்த 2011-ஆம் ஆண்டு துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை கூவம் ஆற்றங்கரையோரப் பகுதியில் செயல்படுத்தக் கூடாது என்று போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றம் வரை சென்று திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தோம். அதன்பிறகு, அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.

தற்போது அதே திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இந்தச் சாலையில் ஏராளமான வளைவுகள் உள்ளன. இதுபோன்ற வளைந்த சாலைத் திட்டத்துக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், இந்தத் திட்டத்துக்காக ஏராளமான குடிசைப் பகுதிகள் அப்புறப்படுத்தப்பட உள்ளன. அடித்தட்டு, ஏழை மக்களை அப்புறப்படுத்தும் அரசு, பெரும் முதலாளிகளின் நிலத்தின் வழியாக திட்டத்தைச் செயல்படுத்த மறுக்கிறது. ஆகவே, இந்தத் திட்டத்தால் குடிசைப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் ஆதிதிராவிடா் மாணவா்கள் தொழில் கல்வி பயின்றால் அவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

மாவட்டத் தலைவா்கள் சம்பத்குமாா், மனமோகனதாசன், மாவட்டச் செயலா்கள் அம்பேத்பிரியன், குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.