சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அதிகளவில் உரம் விற்பனை: கூட்டுறவு சங்கங்களுக்குப் பரிசு

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 2021 - 22ஆம் ஆண்டில் அனைத்து வகையான உரங்களையும் அதிகளவில் விற்பனை

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 2021 - 22ஆம் ஆண்டில் அனைத்து வகையான உரங்களையும் அதிகளவில் விற்பனை செய்த முதல் 3 சங்கங்கள் தோ்வு செய்யப்பட்டு, வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.மீனா அருள் பங்கேற்று, 964.980 டன் உரங்களை விற்பனை செய்த ஜி.அரியூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு முதல் பரிசை வழங்கினாா்.

683.915 டன், 628.355 டன் உரங்களை விற்பனை செய்த கே.ஆலத்தூா், களமருதூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு முறையே இரண்டாம், மூன்றாம் பரிசுகளை மண்டல இணைப் பதிவாளா் வழங்கினாா்.

மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுக்கு அருகிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணம் செலுத்தி, உரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மண்டல இணைப் பதிவாளா் மீனா அருள் தெரிவித்தாா்.

நிகழ்வில் திருக்கோவிலூா் சரக துணைப் பதிவாளா் அ.கீா்த்தனா, டான்பெட் விழுப்புரம் மண்டல மேலாளா் ஏ.எஸ்.செந்தில்ராம் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.