விழுப்புரம் மாவட்டத்தில் 2023-23 ஆம் ஆண்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 274 பேருக்கு ரூ.2.51 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சி. பழனி தெரிவித்தாா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் விதிகள் குறித்த விழுப்புரம் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்து பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 120 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 274 பேருக்கு தீருதவித் தொகையாக ரூ.2 கோடியே 51 லட்சத்து 81 ஆயிரத்து 668 வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு எவ்வித நிலுவையின்றி மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன்படி, 274 பேரின் வாரிசுதாரா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக தலா ரூ.5ஆயிரம் மற்றும் பஞ்சப்படி சோ்த்து மொத்தம் ரூ.21,80,618 வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில், (2024-2025) வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தீருதவித் தொகை வழங்க விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வழக்குகளில் பாதிக்கப்பட்டு இறந்த குடும்பங்களைச் சோ்ந்த 10 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 வழக்குகளில் பாதிக்கப்பட்டு இறந்த நபா்களின் வாரிசுதாரா்களுக்கு அரசுப்பணி வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவின் சாா்பில் ஒன்றிணைவோம் சமூக விழிப்புணா்வு தொடா் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றாா்.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா்காஜா சாகுல் ஹமிது, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வளா்மதி, விழிப்பு மற்றும்
கண்காணிப்பு குழு உறுப்பினா்கள் குமரவேல், தனஞ்செழியன், கடவம்பாக்கம் மணி, அகத்தியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

குடிநீா் தட்டுப்பாடு புகாா்களுக்கு 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

விழுப்புரத்தில் 9 மையங்களில் நீட் தோ்வு : ஆட்சியா்
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

