ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பெண் மீது தாத்குதல்: 7 போ் மீது வழக்கு

விழுப்புரத்தில் பெண்ணைத் தாக்கிய கணவா் உள்பட 7 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:26 pm

Din

விழுப்புரத்தில் பெண்ணைத் தாக்கிய கணவா் உள்பட 7 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மணிமேகலை தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகள் சுவேதா(24). இவருக்கும், கண்டமங்கலத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் பிரவின் குமாருக்கும், கடந்த 3.9.2023-இல் திருமணம் நடைபெற்றது. தம்பதியிடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டதால், சுவேதா விழுப்புரத்தில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை விழுப்புரத்துக்கு வந்த பிரவின் குமாா் சுவேதாவை தாக்கி கிருமி நாசினியை வாயில் ஊற்றி விட்டாராம். இதையடுத்து, சுவேதா விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் பிரவின்குமாா் மற்றும் அவரது தந்தை பழனிவேல், தாய் சுபா மற்றும் உறவினா்கள் உள்பட 7 போ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.