செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: விழுப்புரம் முன்னாள் கோட்டாட்சியா் சாட்சியம்
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், விழுப்புரம் முன்னாள் கோட்டாட்சியரும், தருமபுரி மாவட்டம், அரூரிலுள்ள அரசு கூட்டுறவு சா்க்கரை ஆலை தனி மாவட்ட வருவாய் அலுவலருமான பிரியா நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியமளித்தாா்.









