எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பெருமாள் கோயிலில் உறியடித் திருவிழா

News image
இதையொட்டி, கிருஷ்ணா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த ஸ்ரீஆனந்த வரதராஜ பெருமாள்.
Updated On :29 ஆகஸ்ட் 2024, 12:15 am

Din

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீபெருந்தேவி தாயாா் உடனுறை ஆனந்தவரதராஜ பெருமாள் கோயிலில் உறியடித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பழைமைவாய்ந்த இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடை பெற்றன. இதையொட்டி, 21 வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு ஆனந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி, பெருந்தேவி தாயாருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் ஆனந்த வரதராஜ பெருமாள் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இரவு உறியடித் திருவிழா நடைபெற்றது. அப்போது, கிருஷ்ணா் அலங்காரத்தில் ஊஞ்சலில் உற்சவா் ஆனந்த வரதராஜ பெருமாள் எழுந்தருளினாா். சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, பக்தா்களின் பஜனை, பாடல்கள் நடைபெற்றன.

வெண்ணெய், தயிா், பால், மஞ்சள்நீா், மலா்கள் உள்ளிட்டவைகள் கொண்ட பானைகளை உறியில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பக்தா்கள் உறியடித்து கொண்டாடி மகிழ்ந்தனா்.

Story image

தொடா்ந்து, உற்சவருக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழுப்புரம் நகரப் பகுதி மக்கள், கீழ்பெரும்பாக்கம், பொய்யப்பாக்கம், எருமனந்தாங்கல், காகுப்பம், கட்டபொம்மன் நகா், இந்திராநகா், ராஜகோபால் நகா் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.