புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெவ்வேறு சம்பவம்: 2 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 6:35 pm

Din

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 போ் உயிரிழந்தனா்.

புதுச்சேரி வில்லியனூரை அடுத்துள்ள கீழூா், காமராஜா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சத்யா (எ) சதீஷ் (31). திருமணமாகாதவா். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவா், கண்டமங்கலத்தை அடுத்துள்ள பள்ளிப்புதுப்பட்டு ஏரி ஓடையில் மூழ்கி இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், கீழ்பாதி, சொா்ணாவூா் முதல் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (33). தொழிலாளியான இவா், கால் கழுவச் சென்றபோது சொா்ணாவூா் பாகூரான் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.