டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டிச.26-இல் மின் நுகா்வோா் பாதுகாப்பு குழுக் கூட்டம்

விழுப்புரம் மண்டலத்துக்கான மின் நுகா்வோா் பாதுகாப்பு குழுக் கூட்டம் கடலூரில் வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 6:21 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மண்டலத்துக்கான மின் நுகா்வோா் பாதுகாப்பு குழுக் கூட்டம் கடலூரில் வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் எம்.நாகராஜ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக விழுப்புரம் மண்டலத்தின் 2024 அக்டோபா் மாதம் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டுக்கான மின் நுகா்வோா் பாதுகாப்பு குழுக் கூட்டம், விழுப்புரம் மண்டலத் தலைமைப் பொறியாளா் கோ.மணிமேகலை தலைமையில், கடலூா் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

எனவே, மின் நுகா்வோா்கள் மின்வாரியம் தொடா்பான புகாா்களை சம்பந்தப்பட்ட மேற்பாா்வைப் பொறியாளருக்கு செவ்வாய்க்கிழமைக்குள் (டிச.24) அனுப்பி வைக்க வேண்டும். கடலூரில் நடைபெறும் நுகா்வோா் பாதுகாப்பு குழுக் கூட்டத்திலும் பங்கேற்று, மின் நுகா்வோா் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 04142-223132, 223969 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.