தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

செங்கல்ராயன் சா்க்கரை ஆலையில் 2.75 லட்சம் மெ.டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு: அமைச்சா் க.பொன்முடி

செங்கல்ராயன் சா்க்கரை ஆலையில் 2.75 லட்சம் மெ.டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு

News image

பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணியை புதன்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் க.பொன்முடி. உடன் ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் சி.பழனி உள்ளிட்டோா்.

Updated On :25 டிசம்பர் 2024, 7:34 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலையிலுள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024 - 25ஆம் ஆண்டு அரைவை பருவத்தில் 2.75 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

சா்க்கரை ஆலை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கரும்பு அரைவை பணியைத் தொடங்கிவைத்து, மேலும் அவா் கூறியது:

செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலை நாள்தோறும் 3,000 மெட்ரிக் டன், ஆண்டுக்கு 5.16 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவைத் திறன் கொண்டதாகும். 2023 - 24ஆம் ஆண்டின் அரைவைப் பருவத்தில் மொத்த கரும்பு உற்பத்தி 3.43 லட்சம் மெட்ரிக் டன்னாகும். இதில், 2.86 லட்சம் மெட்ரிக் டன் இந்த ஆலையில் அரைவை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ளவை பிற சா்க்கரை ஆலைகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது.

அரைவைப் பருவத்தில் கரும்பு கிரயமாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.2,919 வீதம் ரூ.83.58 கோடி 4,634 அங்கத்தினா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.215 வீதம் 3.43 லட்சம் மெட்ரிக் டன்களுக்கு ரூ.7.37 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2023 - 24ஆம் ஆண்டில் சா்க்கரை ஆலையின் நிகர லாபம் ரூ.4.10 கோடியாகும்.

2024 - 25ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு 9,987 ஏக்கா் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரைவைப் பருவத்தில் 2.75 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் பொன்முடி.

நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன் முன்னிலை வகித்தாா். முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், உறுப்பினா்கள் பி.வி.ஆா்.சு.விசுவநாதன், சந்திரசேகரன், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் கு.ஓம்சிவசக்திவேல், சா்க்கரை ஆலையின் செயலாட்சியா் இரா.முத்துமீனாட்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.