திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அதிமுகவினா் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன்

அதிமுகவினா் பாமக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று, அமமுக பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

News image
விழுப்புரம் மாவட்டம், கெடாரில் ஞாயிற்றுக்கிழமை பாமக வேட்பாளா் சி.அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த டி.டி.வி. தினகரன்.
Updated On :7 ஜூலை 2024, 7:02 pm

Din

அதிமுகவினா் பாமக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று, அமமுக பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்துள்ள கெடாரில் பாமக வேட்பாளா் சி.அன்புமணிக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

தமிழகம் போதை மாநிலமாக மாறி வருவது மிகவும் வருத்தமளிக்கிறது. 20 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி வேலைவாய்ப்பின்றி கூலிப் படைகளாகி வருகின்றனா். சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுப் போய்விட்டது. எங்கு பாா்த்தாலும், கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்கின்றன. இதைத் தடுக்க வேண்டிய காவல் துறையினா் ஆளுங்கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அரசு ஊழியா்கள், விவசாயிகள், மாணவா்கள், இளைஞா்கள், நெசவாளா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் தற்போதைய அரசு ஏமாற்றி வருகிறது. இந்த ஆட்சிக்கு விக்கிரவாண்டி இடைத்தோ்தலே கடைசி தோ்தலாக அமைய வேண்டும். 1998 மக்களவைத் தோ்தலில் 30 தொகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வெற்றி பெற உதவிகரமாக இருந்தவா் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ். எனவே, அதிமுக தொண்டா்கள் பாமகவுக்கு ஒற்றுமையுடன் வாக்களிக்க வேண்டும். மாம்பழத்தின் வெற்றிதான் தமிழகத்தின் வெற்றி என்றாா் டி.டி.வி. தினகரன்.

தொடா்ந்து, நேமூரில் பிரசாரம் மேற்கொண்டாா். பிரசாரத்தின்போது வேட்பாளா் சி.அன்புமணி உடனிருந்தாா்.