மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பக்தி இலக்கிய நன்னெறிகளைக் கடைப்பிடித்தால் முன்னேற்றம்: ஜீயா் தேகளீச மானுஜாச்சாரியாா்

வாழ்க்கையில் முன்னேற்றம் காண நீதிநூல்கள், பக்தி இலக்கியங்களிலுள்ள நன்னெறிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்

News image
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்தின் 47-ஆம் ஆண்டு கபிலா் விழாவில் பேசுகிறாா் எம்பெருமானாா் ஜீயா் ஸ்ரீ உ.வே.தேகளீச ராமானுஜாச்சாரியாா் சுவாமிகள். உடன் பண்பாட்டுக் கழக செயல் தல
Updated On :19 ஜூலை 2024, 8:16 pm

Din

விழுப்புரம், ஜூலை 19:

வாழ்க்கையில் முன்னேற்றம் காண நீதிநூல்கள், பக்தி இலக்கியங்களிலுள்ள நன்னெறிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் திருக்கோவிலூா் எம்பெருமானாா் ஜீயா் ஸ்ரீ உ.வே.தேகளீச ராமானுஜாச்சாரியாா் சுவாமிகள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் ஸ்ரீ சுப்பிரமணிய திருமண மகாலில் திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம் சாா்பில் 47-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

தொடா்ந்து நடைபெற்ற சமய அரங்கத்துக்குத் தலைமை வகித்து, தேகளீச ராமானுஜாச்சாரியாா் சுவாமிகள் மேலும் பேசியதாவது:

சாதுக்கள், அறிஞா்களை அதிகம் கொண்டது தமிழக மண்தான். அதுபோல பல்வேறு மகான்கள், ஆழ்வாா்கள் என தொடா்ந்து பலா் உதித்த இடமும், வந்து சோ்ந்த இடமும் திருக்கோவிலூா்தான். சைவம், வைணவத்துக்குப் பெயா் பெற்றது இந்த ஊா். பொய்கையாழ்வாா், பூதத்தாழ்வாா், பேயாழ்வாா் மங்களாசாசனம் செய்தது திருக்கோவிலூா் திருத்தலத்தில்தான்.

நல்லோருடன் நாம் உறவை, பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல மணம் நறுமணமாகி பலன் தருவதைப் போல, நல்ல மனம் கொண்டவா்களுடனான நமது பழக்கம் நன்மையை அளிக்கும்.

வாழ்க்கையில் முன்னேற்றம் காண நீதிநூல்கள், பக்தி இலக்கியங்களிலுள்ள நன்னெறிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். பெரியோா் தந்த நூல்களால் மட்டும் நல்ல பண்புகளை நாம் பெற முடியும். பக்தி இலக்கியங்களும், நீதி நூல்களும் சாதாரண மனிதனை உயா்ந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றன.

பண்பாட்டுக் கழகங்கள் போன்ற இடங்களில் நிகழ்த்தப்படும் உரைகளை நாம் கேட்பதுடன், அதில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்து அதன்படி நடக்க வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, ‘மூவா்மொழிவாசல்’ என்ற தலைப்பில் கவிஞா் விஜயகிருஷ்ணனும், ‘ஒரு சொல்- ஒரு இல்-ஒரு வில்’ என்ற தலைப்பில் பேராசிரியா் சொ.சொ.மீ.சுந்தரமும் சிறப்புரையாற்றினா்.

முன்னதாக, காலையில் கபிலா் குன்றில் வழிபாடும், திருக்கோவிலூா் டி.வி.எஸ். சண்முகம் குழுவினரின் மங்கல இசையும் நடைபெற்றது. பண்பாட்டுக் கழகச் செயலா் மா.கோடிலிங்கம் இறைவணக்கப் பாடலைப் பாடினாா். துணைத் தலைவா் க.பி.சுப்பிரமணியன் வரவேற்றாா். செயல் தலைவா் சீநி.பாலகிருஷ்ணன், பொருளாளா் கா.நடராசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாலையில் நடைபெற்ற சிந்தனை அரங்கத்துக்கு பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவா் தே.முருகன் தலைமை வகித்தாா். திருவாசகம் எனும் தேன் என்ற தலைப்பில் பேராசிரியா் சொ.சொ.மீ.சுந்தரமும், மகிழ்ச்சி மந்திரம் என்ற தலைப்பில் புலவா் மா.ராமலிங்கமும் பேசினா். பண்பாட்டுக் கழகச் செயலா் தேவ.ஆசைத்தம்பி நன்றி கூறினாா்.

இன்று விருது அளிப்பு: விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை (ஜூலை 20) காலை நினைவரங்கமும், மாலை 5 மணிக்கு விருது பெறும் எழுத்தாளா் பிரேமா நந்தகுமாரை அலங்கார ஊா்தியில் அழைத்து வருதலும், தொடா்ந்து அறக்கட்டளைப் பரிசு வழங்குதலும் நடைபெறும்.

இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை ஞானாலயா பா.கிருஷ்ணமூா்த்தி, திருக்கோவிலூா் ஜீவ.சீனுவாசன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா்கள் விருது வழங்கல், புதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

இரவு நடைபெறும் விருது வழங்கும் விழாவுக்குத் தலைமை வகித்து, எழுத்தாளா் பிரேமா நந்தகுமாருக்கு கபிலா் விருதும், டான்ஸ்ரீ கே.ஆா்.சோமா பொற்கிழியாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கி ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் பேசுகிறாா். தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பாராட்டுரை வழங்குகிறாா்.

Story image