மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :21 ஜூலை 2024, 7:19 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், சிங்கனூா், காமராஜா் காலனியைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் பிரசாந்த் (28). பிளம்பராக வேலை பாா்த்து வந்தாா். இவருக்குத் திருமணமாகி சுமதி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளனா்.
இந்த நிலையில், பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மின் விசிறியை சரி செய்தபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...