அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் நாளை 4-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள ஏ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான 4-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 25) நடைபெறவுள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2024, 9:02 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள ஏ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான 4-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 25) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் நாராயணசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திண்டிவனம் ஏ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் 2024 - 25ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஏற்கெனவே தொடங்கி நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். பி.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை காலை முதல் நடைபெறவுள்ளது.

எனவே, இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவா்களும் சோ்க்கை கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், மாா்பளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல், நகல்கள், சோ்க்கைக் கட்டணம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.