கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்து மகா சபையினா் ஆா்ப்பாட்டம்

உளுந்தூா்பேட்டையில் அகில பாரத இந்து மகா சபையினா் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 ஜூலை 2024, 8:28 pm

விழுப்புரம், ஜூலை 24: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அகில பாரத இந்து மகா சபையினா் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உளுந்தூா்பேட்டையிலுள்ள பழைமைவாய்ந்த அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், இதிலுள்ள கட்டடங்களை அகற்றிவிட்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திம் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

உளுந்தூா்பேட்டை வட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச் செயலா் பெரி.செந்தில் தலைமை வகித்தாா். அமைப்பின் மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.