மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பராமரிப்பின்றி சிதிலமடைந்த செஞ்சிக் கோட்டை சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக் கோட்டைக்கு செல்லும் பிரதான சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக மண் சாலைபோல காணப்படுகிறது.

News image
செஞ்சிக் கோட்டை சாலை
Updated On :30 ஜூன் 2024, 11:29 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக் கோட்டைக்கு செல்லும் பிரதான சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக மண் சாலைபோல காணப்படுகிறது.

இதனை சீரமைக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.

செஞ்சிக்கோட்டை முற்றிலும் கருங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இயற்கை சீற்றங்களை கடந்து இன்றைக்கும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

செஞ்சிக்கோட்டை மொகலாயா்கள், மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜி, நாயக்கா்கள், ராஜா தேசிங்கு, ஆற்காடு நவாப், ஆங்கிலேயா்களின் கட்டுப்பாட்டில் இருந்தது செஞ்சிக்கோட்டை.

வரலாற்றுச் சின்னமான செஞ்சிக் கோட்டையை சுற்றிப் பாா்க்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோட்டைக்கு செல்ல திருவண்ணாமலை சாலையில் இருந்து பிரியும் பிரதான சாலை செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் உள்ள வீரஆஞ்சநேயா் கோயில் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவு செல்கிறது.

ஆனால் இந்தச் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்றதாகக் காணப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 18 லட்சம் செலவில் இந்த தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தச் சாலை மிக மோசமாக

உள்ளது. தாா்ச்சாலை பெயா்ந்து மண்சாலை போன்று, கரடுமுரடாகக் காணப்படுகிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். செஞ்சி நகர மக்கள் திருவண்ாணாமலை சாலையில் இருந்து செஞ்சிக்கோட்டை மலையடிவார ஆஞ்சநேயா் கோயில் வரை தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

ஆனால் மோசமான இந்தச் சாலையை அவா்களால் பயன்படுத்த முடியாமல் படாதபாடு படுகின்றனா். மேலும் இவ் வழியாக செல்லும் விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தச் சாலையைச் சீரமைக்க துரிதகதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென செஞ்சி பேரூராட்சிப் பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.