நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 நவம்பர் 2024, 5:43 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், பாப்பாஞ்சாவடி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குப்புசாமி மனைவி மல்லிகா (58). இவா், ஞாயிற்றுக்கிழமை திருச்சிற்றம்பலம் காலனி தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் வீட்டில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்க சென்றிருந்தாா். அப்போது, அங்கு பந்தலில் கட்டப்பட்டிருந்த அலங்கார விளக்கு வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.